மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்ட மைய நூலக கட்டடம் கட்ட இடம் ஒதுக்காத மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறுகிறது. கலைஞர் நூற்றாண்டில் நூலக கட்டடம் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் இடம் ஒதுக்கப்படவில்லை. கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, மமக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாலை மறியலில் பங்கேற்க உள்ளன. சமூக ஆர்வலர்கள், நூலக வாசகர்கள், மாணவ, மாணவிகள் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து இன்று மறியல்
previous post