சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இந்தாண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். பாண்டி மெரினாவில் குடிநீரை குழாய்கள் மூலம் கொண்டு செல்ல ரூ.12.50கோடி திட்ட மதிப்பீடு ஆகும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11,12ம்வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 43கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னையாபுரத்தில் ரூ.23 கோடியில் ஏழை மக்களுக்காக அடுக்குமாடி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது புதுசேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.