டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்கியுள்ளார். தமிழக வெள்ள பாதிப்பு குறித்தும் கூடுதல் நிவாரண நிதி கேட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் நாளை சந்திப்பு நடைபெறுகிறது.