பால்கர்: கோடை வெயில் நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் ஒசர் வீரா கிராமத்தை சேர்ந்த சோனாலி வகாத் என்ற கர்ப்பிணி பெண், உடல்நலக் குறைவால் கடும் வெயிலில் 3.5 கி.மீ தூரமுள்ள மருத்துவமனைக்கு நடந்தே சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டிற்கு திரும்ப 3.5 கி.மீ நடந்தே வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் அந்த பெண் மீண்டும் மயக்கமுற்றார். அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் அதிக நேரம் வெயிலில் நடந்து சென்றதால், உடலில் உஷ்ணம் ஏற்பட்டு இறந்ததாக டாக்டர் சஞ்சய் போடடே தெரிவித்தார். அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் இரு வேறு புழுதிப் புயலில் சிக்கி தார்வார் கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண்ணும், நாக்லா லட்சுமி கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவனும் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் ெதரிவித்தனர்.