சேலம், ஜூலை 25: ரத்தத்தில் வரைந்த தேசத்தலைவர்களின் படத்தை சுதந்திர தினத்தில் காந்திசிலை முன்பு வைத்து மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று சமூகசேவகி ேகாரிக்ைக விடுத்துள்ளார். சேலத்தை சேர்ந்தவர் சமூக சேவகி சுசீலா. இவர் தனது ரத்தத்தால் வரைந்த தேசத்தலைவர்களின் படங்களுடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இது குறித்து சுசீலா கூறுகையில், ‘‘சுதந்திரத்திற்கு பாடுபட்ட கட்டபொம்மன், வேலுநாச்சியார், காந்தி, அம்பேத்கர், கப்பலோட்டிய தமிழன், பகத்சிங் உள்பட பல தேச தலைவர்களின் மீது எனக்கு தனி ஈடுபாடு உண்டு. அவர்களை நினைவுகூறும் வகையில் அவர்களின் திருவுருவத்தை என்னுடைய ரத்தத்தால் கடந்த 2வாரத்திற்கு முன்பு ஓவியமாக வரைந்தேன். இவ்வாறு வரையப்பட்ட தேச தலைவர்களின் ஓவியத்தை வரும் சுதந்திர தினத்தன்று சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காந்தி சிலை முன்பு வைத்து மரியாதை செலுத்த எனக்கு மாவட்டம் உரிய அனுமதியளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க வந்தேன்,’’ என்றார்.