மேல்மருத்துவர்: பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று மறைந்த பங்காரு அடிகளாருக்கு கவிஞர் வைரமுத்து புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர். சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்; இறுகிக் கிடந்த ஆன்மிக முடிச்சுகளைத் தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர் என்று வைரமுத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.