சென்னை: சென்னையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. எழும்பூரில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ம.க. இன்னும் தொடங்காத நிலையில் இன்று பொதுக்குழு கூடுகிறது.