சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பணி தொடங்கியது; பணியை முடிப்போம் வெற்றி வாகை சூடுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து திமுக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.