திருப்பூர்: நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கப் பாசனப் பகுதியிலுள்ள 4,744 ஏக்கர் நிலங்களில் நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், நல்லதங்காள் பிரதானக் கால்வாய் மதகு வாயிலாக 21.05.2023 முதல் 15.06.2023 முடிய உள்ள காலங்களில் (இரு நனைப்புகள் 2 x 7 நாட்கள் தகுந்த இடைவெளிவிட்டு) 14 நாட்களுக்கு 42.34 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் மற்றும் உடையார் குளம் பாசன பகுதியிலுள்ள 87.36 ஏக்கர் நிலங்களில் நிலையிலுள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும்,
ஆற்று மதகு மூலம் நல்லதங்காள் ஓடை வழியாக உடையார் குளத்திற்கும் 21.05.2023 முதல் 27.05.2023 வரை 6 நாட்களுக்கு 12.96 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 4831.36 ஏக்கர் நிலங்களுக்கு 55.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 21.05.2023 முதல் 15.06.2023 முடிய 26 நாட்களுக்குள், தகுந்த இடைவெளி விட்டு, நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.