திருச்சி: நாட்டை 10 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும், எடப்பாடி தரப்பில் உள்ளவர்களும் என்னிடம் பேசி வருகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்