சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு சரிசெய்யப்பட்டது. இரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.