ஒடிசா: ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளனர். விபத்து நடந்த வழித்தடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சம் நடைமுறையில் இல்லை என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறியுள்ளார்.