Thursday, May 9, 2024
Home » வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

by Lakshmipathi

*வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் தெளிப்பு

திருமலை : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருகிற 9ம்தேதி அங்குரார்பணத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று கோயிலில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம்(சுத்தம் செய்யும் பணி) நடைபெற்றது. இதில் கோயில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்தனர்.

பின்னர் நாமகோம்பு, திருச்சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக்கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. பிறகு பக்தர்கள் தாயார் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தலைவர் கருணாகர் மூலம் அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் 15 திரைக்களை வழங்கினர்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தலைவர் கருணாகர் கூறுகையில், ‘நவம்பர் 9ம்தேதி அங்குரார்பணத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 10ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. 14ம்தேதி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான கஜவாகன சேவையில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 18ம்தேதி பஞ்சமிதீர்த்தத்தை முன்னிட்டு பக்தர்கள் வந்து கோயில் குளத்தில் புனித நீராடுவார்கள். ஆகையால், பக்தர்களுக்கு எந்தவித சிரமும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ₹9 கோடி செலவில் தெப்பகுளம் நவீனமயமாக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

திருச்சானூர் பத்மாவதி அம்மனுக்கு வாகன சேவைகள் திருமலையில் ஏழுமலையான் கோயிலில் நடந்தது போன்று சிறப்பாக நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்’.
இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் யானதையா, நாகசத்தியம், சுப்பராஜூ, இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், கோயில் துணை தலைவர் கோவிந்தராஜன், கண்காணிப்பாளர்கள் ஸ்ரீவாணி, சேஷகிரி, அர்ச்சகர்கள் பாபுசுவாமி, வேம்பள்ளி னு சுவாமி, மணிகண்ட சுவாமி, சிவபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

thirteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi