நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஜேடர்பாளையம் காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்து சேலம் சரக டிஜிஜி விஜயகுமார் உத்தரவு அளித்துள்ளார். ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்துள்ளனர். பரமத்தி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தருமபுரி பாலக்கோடு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி பரமத்தில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.