Friday, May 17, 2024
Home » நாகர்கோவில் மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி மர்ம சாவு

நாகர்கோவில் மருத்துவமனை விடுதியில் நர்சிங் மாணவி மர்ம சாவு

by Arun Kumar

நாகர்கோவில்: நாகர்கோவில் திரவியம் மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் விடுதியில் மாணவி ஒருவர் குளியல் அறையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சேர்மத்துரை.

இவரது மகள் கீதா (19). இவர், நாகர்கோவில் தேரேகால்புதூரில் உள்ள திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை செவிலியர் பயிற்சி வகுப்பில் ஹெல்த் கேர் அசிஸ்டெண்ட் 2ம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவமனைக்கு சொந்தமான விடுதியில் தான் தங்கி இருந்தார். இந்தநிலையில் இன்று அதிகாலையில் விடுதியின் குளியல் அறையில், கீதா தூக்கில் பிணமாக தொங்கியதாக வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கீதாவின் உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்போது வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கீதா தங்கி இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது செல்போனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கீதாவின் தோழிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

You may also like

Leave a Comment

16 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi