கரூர்: பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை, கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொட்டம்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் இன்று வாக்களித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கோவையில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாக நிரூபித்தால், அந்த நிமிடம் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்.
காரணம் இந்த ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர் பெருமக்கள் மட்டும்தான். வாக்காளர் பெருமக்கள்தான் இந்த நாடு எப்படி செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். ஆளுபவருக்கும், நமக்கும் எப்போதும் தொப்புள்கொடி உறவு இருக்க வேண்டும் என்றார்.