சென்னை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மிகப்பெரிய நிதிச்சுமையின் காரணமாக, ஓரளவுக்கு நிதி மேலாண்மையை கையாண்டுள்ளது என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தாமல், ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது எனவும் கூறினார்.