Monday, May 20, 2024
Home » மணல் குவாரி பிரச்சனை வழக்கு; போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜர்: அடுத்த மாதம் 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

மணல் குவாரி பிரச்சனை வழக்கு; போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் ஆஜர்: அடுத்த மாதம் 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Neethimaan


கடலூர்: மணல் குவாரி பிரச்சனை வழக்கில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சன்னாசி நல்லூருக்கும், கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கும் இடையே வெள்ளாறு உள்ளது. இங்கு அரசு மணல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரி தங்களுக்கு தான் சொந்தம் என்று சன்னாசிநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் கூறி வந்தனர். இதனால் இரண்டு மாவட்ட வருவாய்துறையினரும் அங்கு சென்று மணல் குவாரியை அளந்து இரு பிரிவினருக்கும் பிரித்துக் கொடுத்தனர். ஆனால் அதற்கு சன்னாசிப்பேட்டை சேர்ந்த பொதுமக்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதன் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு சன்னாசிப்பேட்டை பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டார்.இந்த போராட்டத்தின் போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீசார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், உட்பட 8 பிரிவுகளின் கீழ் 37 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 4 பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கடலூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜர் ஆனார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

You may also like

Leave a Comment

13 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi