பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள அரியன் வாயல் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. மீஞ்சூர் பேரூராட்சியில் அரியன்வாயல் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி. அரியன்வாயல் ஊராட்சி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் நேற்று நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மாலா தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர் அபுபக்கர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாத்திமா முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ‘அறம்’ திரைப்பட இயக்குநர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோபி நயினார், வியாபாரிகள் சங்க செயலாளர் சேக் அகமது கலந்து கொண்டார். பின்னர், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காண விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதில், அபுல் கலாம் ஆசாத் மூன்று தெருக்கள், ஜெயலட்சுமி நகர், ஜெகன் நகர் இளங்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில், அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு கோஷங்களும் துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாரூக் தஸ்தகீர், அசாருத்தின், முபீன் சாகுல், ஹமித் பக்கிர், மொய்தின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.