கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி(69) வியாழனன்று மாலை காளிகாட்டில் உள்ள அவரது வீட்டில் தவறி கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அவரது முன்நெற்றி மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது. மம்தாவின் நெற்றியில் மூன்று தையலும், மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் ஓய்வில் இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் மாலை மருத்துவர் குழுவினர் முதல்வரின் வீட்டிற்கு சென்று அவரது உடல்நிலை குறித்து சோதனை செய்தனர். இந்நிலையில் முதல்வர் மம்தா நலமாக இருப்பதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் குழு நேற்று தெரிவித்தனர்.
மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்
previous post