சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி 2 நிபந்தனை விதித்துள்ளது.
நிபந்தனை 1-“ தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், தமிழக மக்களின் நலனிலும் எந்த சமரசமும் அனுமதிக்கப்பட மாட்டாது”
நிபந்தனை 2-” கமல்ஹாசனின் சிந்தனைகளோடும், கொள்கைகளோடும் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே கூட்டணி.
2 நிபந்தனைகளோடும் ஒத்துவராவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயங்க மாட்டோம். கூட்டணியை நான் பார்த்து கொள்கிறேன், தேர்தல் பணிகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள் என செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தியுள்ளார்.