திருப்பூரில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜவில் பெரிய புள்ளிகள் இணைவார்கள். சிலர், டெல்லி சென்று இணைய விரும்புகின்றனர். மாற்று கட்சியில் இருந்து, பெரிய புள்ளிகள் வரும்போது, எங்கள் கட்சியில் உள்ள நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சமாதானம் செய்ய வேண்டியுள்ளது. எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் கட்சியில் இணைய உள்ளனர். இரண்டரை ஆண்டு பொறுப்பு இருந்தும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜயதாரணி பாஜவில் இணைந்துள்ளார். மிகப்பெரிய புள்ளிகள், கட்சியில் இணைப்போகின்றனர். வருபவர்களை, ஆத்மார்த்தமாகவும், அன்புடனும் ஏற்றுக்கொள்வோம். மற்ற மாநிலங்களைபோல், திரும்பி செல்ல விடமாட்டோம். இது ஆரம்பம்தான். தொடர்ந்து பார்க்கலாம்.
2 பாஜ எம்எல்ஏக்கள் பாஜவிலிருந்து அதிமுகவுக்கு வரப்போவதாக, கோவை எம்எல்ஏ தெரிவித்துள்ளார். அவர்கள் பெயரை முதலில் கூறட்டும். முதலில் எங்களை மதிக்காத ஒரு கட்சியினர், காலை துவங்கி இரவு வரை, நாள் முழுவதும் எங்களையே திட்டிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் எதிரிகளை வெல்ல, நாங்களும், சாம, தான, பேத, தண்டத்தை பிரயோகிப்போம். அதிமுக இனியும் விக்கெட் எடுக்க வாய்ப்பில்லை; எங்களுடன் கூட்டணியில் இணையவும் வாய்ப்பில்லை. நாங்களும், யாரையும் எதிர்பார்ப்பதில்லை. வருபவர்கள் தானாக வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
இதை பார்த்த நெட்டிசன்கள், இன்னுமும் இந்த ஊரு நம்மள நம்புதுனு அண்ணாமலை நினைகிறாரோ? என்று கிண்டலடித்து வருகின்றனர்.