சென்னை: சென்னையில் இருந்து பிராங்க் பர்ட் நகருக்கு செல்ல வேண்டிய லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டிய 250-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர்.