வத்திராயிருப்பு, நவ.15: வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே சுமார் ஒரு மணி பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் குடைபிடித்தவாறே சாலைகளில் சென்று தங்களது பணியை மேற்கொண்டனர்.