சென்னை: சென்னை, கோவையில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் நிறுவனம் பழனி பெரியசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.எம். குழுமத்தின் ராஜகோபாலன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பழனி பெரியசாமி தலைமையிலான இயக்குநர் குழுவே லீ மெரிடியன் ஹோட்டலை நடத்தவும் அனுமதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.எம். உட்பட ஏலம் கோரிய மனுதாரர்களின் கோரிக்கையை கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் நிராகரித்தது. இடைக்காலமாக ஹோட்டல் நிர்வாகத்தை நடத்த நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரியும் வாபஸ் பெறப்பட்டார். நெல்லை பாலம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரியும் வெள்ளத்தில் மூழ்கி இருந்துள்ளன.