நீலகிரி: உதகை மரவியல் பூங்கா முன் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் கட்டிடத்துக்கான கட்டுமான பணி வழக்கம் போல் இன்று காலை நடைபெற்று வந்தது. கட்டுமான பணியில் 4 வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது அருகில் பள்ளம் தோண்டிய போது அருகில் உள்ள சுவர் சரிந்து விழுந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மண் சரிவில் சிக்கிய இருவரை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதில்; மண்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளி ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளி ஜாகீர் சிகிச்சை பெற்று வருகிறார். மண் சரிவில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.