கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நரசிம்மன் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது பாமக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொடி கட்டுவதற்கும் மற்ற செலவினங்களுக்காகவும் பாஜகவினர் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் பாஜக நிர்வாகி ஜெகநாதன், பாமக ஒன்றியச் செயலாளர் ரங்கனை கீழே தள்ளியதில் மண்டை உடைந்தது. பலத்த காயம் அடைந்த பாமக ஒன்றியச் செயலாளர் ரங்கன், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரியில் பாஜக நிர்வாகி பாமக நிர்வாகி மீது தாக்குதல்
previous post