சென்னை: மூன்று ரயில்கள் மோதி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வந்துள்ளது. கோர ரயில் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம். அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர். ஒடிசா முதலமைச்சரிடம் பேசி தேவையான உதவிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளேன்.காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்கள் உடலை தமிழ்நாடு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது