சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக குழு தமிழகம் வந்துள்ளது. திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 2022 ஆண்டு முதல் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக இதுவரை 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.