*தோசை சுடும்போது சிறிதளவு சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறுமொறுப்பாக வரும்.
*வாழைப்பழத்தின் காம்புப் பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைத்தால், நான்கு நாட்கள் வரை கறுக்காமல்
அப்படியே இருக்கும்.
*கறிவேப்பிலை காய்ந்துவிட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லிப் பானையின் அடியில் உள்ள தண்ணீரில் கறிவேப்பிலையைப் போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
வ றுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
*கிழங்குகளை சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சைமிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும்.
*தயிர்வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம் தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும்.
*இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால் மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராப்பூந்தி
இவற்றையும் மேலே தூவலாம்.
*வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப்போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில் வேகவைத்து எடுத்து சமையலில் பயன்படுத்தினால், பூ கறுக்காமல் இருக்கும்.
*தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசி கூடும்.
*தொண்டை கட்டிக்கொண்டால், கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.
*அதிகளவு பாலாடை தேவைப்பட்டால், கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும். சிறிது நேரத்திலேயே அதிகளவு பாலாடை தோன்றிவிடும்.
*கறிவேப்பிலை, கொத்துமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.
*வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும்போது வழுவழுப்பாக இருக்கும். அதைத் தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
*சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்த பிறகு, அதை ஃப்ரிட்ஜில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன்பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனித்தனியாகவும் மொரமொரப்பாகவும்
இருக்கும்.
*பச்சைமிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் மிளகாயுடன் மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை போட்டு, இறுக மூடி வைக்க வேண்டும்.
– பா.கவிதா.