சென்னை: கருணாநிதி பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் நியமனம் செய்துள்ளனர். நினைவிடங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டுமான பணிக்காக சிறப்பு அதிகாரி நியமனம் செய்துள்ளனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தை புதுப்பிக்கும் பணிகளையும் விஸ்வநாதன் கண்காணிப்பார் என அறிவித்துள்ளனர்.