கேரளா: கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 9 வயது குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். லாரி மோதியதில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்