காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ரயில், தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ரயில் திடீரென சாலையை நோக்கி வந்ததால் வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினார்கள். ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால் இருசக்கர வாகனங்கள் மட்டும் சேதமடைந்த நிலையில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.