பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்கக் கோரி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதலான நகைகளை தவிர மற்றவை கர்நாடக நீதிமன்றத்தில் இல்லை. விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 பொருட்களை ஒப்படைக்க கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது.