மதுரை: அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் அவிழ்த்து விடப்படும் காளைகள் வெளியேற பட்டா நிலத்தில் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கில் நடக்கும் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்படும் காளைகள் வெளியேறுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாதை அமைக்கும் பணிக்கு தடைகோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மனுவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.