டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் டெல்லி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரில் பிரிஜ் பூஷண் வீட்டுப் பணியாளர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக எம்பியான பிரிஜ் பூஷண் வீட்டில் இல்லாத நிலையில் பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.