ஐக்கிய நாடுகள் சபை: அல்-கொய்தா அமைப்பு ஜம்மு-காஷ்மீர், வங்கதேசம் மற்றும் மியான்மரில் தளம் அமைக்கிறது என்று ஐநா எச்சரித்து உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.எஸ்.ஐ.எல் (தாயிஷ்) மற்றும் அல்-கொய்தா அமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. அதில் அல்-கொய்தா அமைப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் தளத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா மையமானது 30 முதல் 60 உறுப்பினர்களுடன் நிலையானதாக உள்ளது.
அதே நேரத்தில் அதன் போராளிகள் எண்ணிக்கை 400 என மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆப்கன் நாட்டில் மட்டும் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இந்தியத் துணைக் கண்டத்தில், அல்-கொய்தாவில் ஏறக்குறைய 200 போராளிகள் உள்ளனர். இந்திய துணைக்கண்டத்தை மையமாக கொண்டு ஐம்மு காஷ்மீர், வங்கதேசம், மியான்மரில் தளம் அமைக்க முயற்சி நடக்கிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.