Saturday, May 11, 2024
Home » சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடியை DP-யாக வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் தேசியக்கொடியை DP-யாக வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

by Arun Kumar

டெல்லி: சுதந்திர தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து தனி நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

அந்த வகையில், 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகமான எக்ஸில் (ட்விட்டர்) தனது டிபியை தேசியக் கொடியாக மாற்றியுள்ளார். இதை நாட்டு மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி (HarGharTiranga) இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடக கணக்குகளின் டிபியை மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில், சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்றும் கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi