Wednesday, May 8, 2024
Home » யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுகான ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுகான ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

by Arun Kumar

சென்னை: நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில், யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான 25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகை பெற www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் 2023-24 க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன்
போட்டித் தேர்வுகள் பிரிவில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மே 28-ல் நடந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், 2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் தொடங்கிவைத்தனர்.

இதனை தொடர்ந்து, நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023ம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையை பெறுவதற்கு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், http://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையை படித்து பார்த்து, இன்று முதல் 22.08.2023ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi