சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் வெற்றிப் பயணம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேலைவாயப்பு கிடைத்தது தொடர்பான நாளிதழ் செய்தி மனநிறைவை தரும் செய்தி. தலைமுறைகள் பல முன்னேற்றம் காண முதல் தலைமுறை பட்டதாரிகள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே திராவிட மாடலின் நோக்கம் எனவும் கூறினார்.