ஓசூர்: ஒசூரில் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.10 லட்சம் கைப்பற்றபட்டவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 28-ல் லோகேஷ் குமார் என்பவர் பெங்களூருவில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட லோகேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.