புதுடெல்லி: இமாச்சல் பிரதேசம், ஜப்பானின் வடக்கு கடற்கரை பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேசம் லாஹவுல், ஸ்பிதி பகுதியில் நேற்றிரவு 10.37 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பதிவானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நிலநிடுக்கவியல் மையம் தெரிவித்தது. சுமார் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் இருந்ததாகவும், அதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல் ஜப்பானின் வடக்கு கடற்கரையான இவாட் மாகாணத்தில், நேற்று நள்ளிரவு 12.59 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜப்பானின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும், சேதம் குறித்த தகவல்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.