சென்னை: அரசு நிலத்துக்கான குத்தகை தொகையை 4 வாரங்களில் செலுத்த ஸ்பிக் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஸ்பிக் உர ஆலைக்கு பயன்படுத்திய அரசு நிலத்துக்கு 1975 முதல் 2008 வரையிலான காலத்துக்கு ரூ.168.73 கோடி செலுத்த ஆணை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி முள்ளக்காட்டில் கழிவுகளை தேக்கி வைக்க 108 ஏக்கர் அரசு நிலத்தை ஸ்பிக் நிறுவனம் பயன்படுத்த அனுமதி தரப்பட்டது.