புதுடெல்லி: குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், குஜராத் மாநில உதய தின வாழ்த்துகள். குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது. இந்த மாநிலம் வரும் காலங்களில் வளர்ச்சியின் அடுத்தகட்ட இலக்குகளை எட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன். மகாராஷ்டிரா தினத்தையொட்டி தனது டிவிட்டர் பதிவில், சிறந்த கலாச்சாரமும், கடின உழைப்பாளிகளான மக்களையும் கொண்டிருப்பதால் மகாராஷ்டிரா, நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற வழிவகுக்கிறது.வரும் ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக முன்னேற வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
குஜராத், மகாராஷ்டிரா உதய தினம்: மோடி வாழ்த்து
previous post