Sunday, June 16, 2024
Home » அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் ரூ.3.91 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 2 பேர் ரூ.3.91 லட்சம் மோசடி

by Lakshmipathi

*ஈரோடு எஸ்பியிடம் புகார்

ஈரோடு : வனத்துறையில் ரேஞ்சர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர்களிடம் ரூ.3.91 லட்சம் பெற்று, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் உட்பட 2 பேர் மோசடி செய்து விட்டதாக ஈரோடு எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ஈரோடு கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி மகன் கோகுல் (27). இவரது நண்பர் தொட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன்மோகன்ராஜ் (26). இவர்கள் இருவரும் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், எஸ்பி ஜவகரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:நாங்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறோம். கொங்கம்பாளையத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி மற்றும் ஈரோடு சூளை மல்லிகை நகரில் வசிக்கும் தமிழ்வாணன் இருவரும் எங்களுக்கு தமிழ்நாடு அரசின் வனத்துறையில் ரேஞ்சர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.

இதற்காக அவர்கள் இருவரிடமும் தலா ரூ.2 லட்சம் பணம் கேட்டனர். இதனை உண்மை என நம்பி நாங்களும் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி முதல் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பல்வேறு தவணைகளாக ரூ.3 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை மூர்த்தி மற்றும் தமிழ்வாணனிடம் வழங்கினோம். இந்த பணத்தினை எங்களது குடும்பத்தினரின் நகைகளை அடகு வைத்து கொடுத்தோம்.

பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து நாங்கள் அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்டோம். அவர்கள் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மட்டும் கொடுத்தனர். ஆனால், மீதமுள்ள ரூ.2.61 லட்சத்தை தரவில்லை. இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி மூர்த்தி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டபோது, பணத்தை தர முடியாது.
முடிந்தால் வழக்கு தொடுத்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். தமிழ்வாணனிடம் பணத்தை கேட்டதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி எங்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி மற்றும் தமிழ்வாணன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

You may also like

Leave a Comment

eighteen + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi