சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை, மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதி அட்சயதிரிதியை அன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்கப்பட்டது. விலை குறைவால் அட்சயதிரிதியை அன்று நகை விற்பனை அதிகமாக இருந்தது. 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,615க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,920க்கு விற்பனையானது. கடந்த 25ம் தேதி தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,630க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 26ம் தேதியும் தங்கத்தின் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.45,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்கப்படுகிறது.