சென்னை: கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி மனு அளித்துள்ளனர். கோவை சிறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா மனு அளித்துள்ளனர். வழக்கு விசாரணையை ஏப்.29-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.