சென்னை: 5 வயது சிறுமியை நாய்கள் கடித்ததன் எதிரொலியாக, சென்னை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு புதிய உத்தரவு அளித்துள்ளனர். “உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்கள் மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்க வேண்டும். “கழுத்துக்கு சங்கிலி போட்டும் வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி. பூங்காவிற்குள் உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை. “ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மற்றும் பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு அளித்துள்ளது.