Sunday, May 12, 2024
Home » கயத்தாறு அருகே லாரி மீது வேன் மோதி நெல்லை தொழிலதிபர் பலி

கயத்தாறு அருகே லாரி மீது வேன் மோதி நெல்லை தொழிலதிபர் பலி

by Lakshmipathi

கயத்தாறு : கயத்தாறு அருகே லாரி மீது வேன் மோதியதில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று திரும்பிய நெல்லை தொழிலதிபர் பரிதாபமாக பலியானார்.நெல்லை டவுன் மேலரதவீதியை சேர்ந்த ஆவத்தா செட்டியார் மகன் வீரப்பன் (70). தொழிலதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தங்களது குலதெய்வம் கோயிலுக்கு சுவாமி கும்பிட கடந்த 6ம் தேதி இரவு வேனில் புறப்பட்டனர். வேனை டிரைவர் மாரியப்பன் ஓட்டினார். நேற்று முன்தினம் (வியாழன்) கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு மாலையில் அறந்தாங்கியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர். வேனில் டிரைவர் உள்பட 12 பேர் இருந்தனர்.

நள்ளிரவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தளவாய்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை வேன் டிரைவர் முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வேன், லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனின் இடதுபுறம் அமர்ந்திருந்த வீரப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வேன் டிரைவர் மாரியப்பன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். தகவலறிந்ததும் கயத்தாறு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கயத்தாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi