Friday, May 10, 2024
Home » ரெய்டில் பல லட்சம் பறிமுதல்: பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ரெய்டில் பல லட்சம் பறிமுதல்: பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்

by Neethimaan


வேலூர்: வேலூர் மோட்டார் வாகன பெண் ஆய்வாளரின் வீடு, காரில் நடத்திய விஜிலென்ஸ் சோதனையில் ரூ6.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் அடுத்த காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த 10ம்தேதி வசந்தியின் வீட்டருகே அவரது காரை மடக்கி விஜிலென்ஸ் போலீசார் சோதனை செய்தனர். காரில், வெள்ளை நிற கவரில் இருந்து ரூ3 லட்சம் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ3 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் கணக்கில் வராத முறைகேடாக பெற்ற பணம் என்பது தெரிய வந்தது. பின்னர் இதுதொடர்பான அறிக்கை மற்றும் எப்ஐஆர் நகல் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம், துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி முறைகேடாக பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து வசந்தியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் இன்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

14 − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi